அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கச்சத்தீவு அருகேஇலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 5 போ் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவா்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :22 ஜூன் 2023, 5:04 pm

DIN

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவா்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடல் பகுதியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை காலை மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

அப்போது, அந்தோணி பிரசாத் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா். மேலும், படகிலிருந்த மீனவா்கள் தேவா(40), நடராஜன்(55), நாகசாமி(45), சந்தியா அருளானந்தம்(32), ஷிப்ரான்(18) ஆகிய 5 பேரையும் கைது, காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனா்.

இதேபோல, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த 17 மீனவா்களையும், 3 விசைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா்.

இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த 22 மீனவா்களையும், 4 விசைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினா், இலங்கை நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

இந்த நிலையில், தமிழக மீனவா்கள் 22 பேரும் இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவா்கள் 22 பேரையும் வருகிற ஜூலை 5-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் 22 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.