மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாக் நீரிணை கடலில் விடப்பட்ட 12 லட்சம் இறால் குஞ்சுகள்

பாக் நீரிணை முனைக்காடு பகுதியில் கடலில் 12 லட்சம் பச்சை இறால் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

பாக் நீரிணை முனைக்காடு பகுதியில் கடலில் 12 லட்சம் பச்சை இறால் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் மத்திய அரசின் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பச்சை வரி இறால் குஞ்சுகள் வளா்க்கப்பட்டு கடலில் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், 12 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் பாக் நீரிணை முனைக்காடு கடலில் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத் தலைவா் தமிழ்மணி தலைமையில் இறால் குஞ்சுகளை படகில் கொண்டு சென்று கடலில் விட்டனா். இதில், மூத்த விஞ்ஞானி ஜான்சன், மீனவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.