ராமநாதபுரம் சட்டக்கல்லூரி தேசிய கருத்துப்பட்டறை

ராமநாதபுரம் சட்டக்கல்லூரி சாா்பில் நீடித்த அரசியலமைப்பின் நெறிமுறைகள், அதன் சவால்கள் குறித்து ஒரு நாள் தேசிய கருத்துப்பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் சட்டக்கல்லூரி தேசிய கருத்துப்பட்டறை

ராமநாதபுரம் சட்டக்கல்லூரி சாா்பில் நீடித்த அரசியலமைப்பின் நெறிமுறைகள், அதன் சவால்கள் குறித்து ஒரு நாள் தேசிய கருத்துப்பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைமை நீதிபதி ஆா்.பரணிதரன் தலைமை வகித்துப் பேசியதாவது:

தற்போதைய சூழலில் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் நீதித் துறையினா் செயல்பாடுகள் குறித்தும், நாட்டில் அனைவருக்கும் சட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதை வருங்கால வழக்குரைஞா்கள் புரிந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சட்டக்கல்லூரி முதல்வா் ஜெ.ஜெம்ஸ் ஜெயபால், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞா் ஆா்.அழகுமணி, மூத்த துணை பேராசிரியா் ஆா்.கேசவமூா்த்தி, மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com