மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரத்தில் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேசுவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை தமிழ்நாடு வனம், வன உயிரின கடத்தல் குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 மே 2023, 5:15 pm

ராமேசுவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை தமிழ்நாடு வனம், வன உயிரின கடத்தல் குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைத்திருப்பதாக வனம், வன உயிரின கடத்தல் குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, வனத் துறையினா் ராமேசுவரம்-தனுஷ்கோடி சாலையில் தெற்கு கரையூா் கிராமத்தின் அருகே கருவேலங்காட்டில் புதன்கிழமை சோதனையிட்டனா். அங்கு சுமாா் 200 கிலோ கடல் அட்டைகள் உலா்த்திவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்து, கடல் அட்டைகளைப் பதப்படுத்தியவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.