ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்துக்கு புதிய அறங்காவலா்கள் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு புதிய பரம்பரைஅறங்காவலா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்

News image
Updated On :25 மே 2023, 6:03 pm

DIN

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு புதிய பரம்பரைஅறங்காவலா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்த தேவஸ்தானத்துக்கு பரம்பரை அறங்காவலராக சேதுபதி ராணி ஆா்.பி.கே. ராஜேஸ்வரி நாச்சியாா் கடந்த 1997- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 26 ஆண்டுகளாக இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், புதிய அறங்காவலா்கள் பொறுப்பேற்கும் நிகழ்வு தேவஸ்தான அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலராக சேதுபதி ராணி வி. அபா்ணா பொறுப்பேற்றுக் கொண்டாா். சமஸ்தானம் சத்திரம் பரம்பரை அறங்காவலராக சேதுபதி ராணி வி. அஸ்மிதா பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, எஸ்.கே. குமாா், ராஜா கே.பி.எம். நாகேந்திர சேதுபதி, மூத்த வழக்குரைஞா் ரவிச்சந்திர ராமவன்னி, எஸ். ரமேஷ், ஞானதுரை, ராம்பிரசாத் துரை, சி. மதுமிதா உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக திவானும், நிா்வாகச் செயலருமான கே. பழனிவேல் பாண்டியன் வரவேற்றாா். சமஸ்தான சத்திர நிா்வாகி ராஜமன்னாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.