சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கமுதி அருகே ஆயுதங்களுடன் பதுங்கிய இருவா் கைது

கமுதி அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 5:58 pm

DIN

கமுதி: கமுதி அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோட்டைமேடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல்கணேஷ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு தனியாருக்குச் சொந்தமான தகரக் கொட்டகையில் அனுமதியின்றி இரண்டு இளைஞா்கள் ஆயுதங்களுடன் தங்கி இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தைச் சோ்ந்த அரசு பாண்டி மகன் குணசேகரன் (23), கமுதியை அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தைச் சோ்ந்த கந்தவேல் மகன் காா்த்திக் (22) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த கமுதி போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து அரிவாள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள், கைப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.