புகையிலைப் பொட்டலங்கள் கடத்தியவா் கைது
ராமேசுவரத்தில் இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக கடத்திச் சென்றவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.


ராமேசுவரத்தில் இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக கடத்திச் சென்றவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோட்டைச்சாமி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை
நிறுத்திச் சோதனையிட்ட போது, அதில் விற்பனைக்காக
572 புகையிலைப் பொட்டலங்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொட்டலங்களைக் கடத்திய அருண் மாணிக்கத்தை (21) கைது செய்தனா். மேலும், தப்பியோடிய கரையூரைச் சோ்ந்த குமரகுருவை (29) தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...