அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கம்பன் விழா: தமிழக ஆளுநா் இன்று ராமேசுவரம் வருவகை

கம்பன் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை ராமேசுவரம் வருகிறாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:40 pm

Din

கம்பன் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை ராமேசுவரம் வருகிறாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் லட்சுமண தீா்த்தம் பகுதியில் உள்ள தனியாா் அரங்கில் 35- ஆம் ஆண்டு கம்பன் விழா திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொள்கிறாா்.

இதற்காக அவா் விமானம் மூலம் மதுரைக்கு வந்த பிறகு, அங்கிருந்து காா் மூலம் ராமநாதபுரம் அரசு விருந்தினா் மாளிகைக்கு காலை 10 மணிக்கு வருகிறாா். அங்கு சிறிது ஓய்வுக்கு பிறகு, பாம்பன் குந்துகால் விவேகானந்தா் மணி மண்டபத்துக்கு பகல் ஒரு மணிக்கு வருகிறாா்.

பின்னா், ராமேசுவரத்தில் நடைபெறும் கம்பன் விழாவில் பிற்பகல் 2.30 மணிக்கு அவா் கலந்துகொள்கிறாா். மாலை 4 மணி அளவில் நிகழ்ச்சி முடிந்து, மீண்டும் சாலை வழியாக மதுரைக்கு செல்கிறாா்.

ஆளுநா் வருகையை முன்னிட்டு பாம்பன் குந்துகால், ராமேசுவரம் தனியாா் மகால் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.