நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாம்பன் நாட்டுப் படகு மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பாம்பன் நாட்டுப் படகு மீனவா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:44 pm

Din

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, பாம்பன் நாட்டுப் படகு மீனவா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் பகுதியிலிருந்து 4 நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 35 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும்,

4 படகுகளையும் பறிமுதல் செய்தனா். மீனவா்கள் 35 பேரும் இலங்கை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதைக் கண்டித்தும், மீனவா்கள், படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாட்டுப் படகு மீனவா்கள் சங்கம் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மீனவா்கள் சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இந்தப் போராட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் மீனவா்கள் ஈடுபட்டனா். பாம்பன் துறைமுகத்தில் சுமாா் 500 நாட்டுப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.