ராமேசுவரம்: ராமேசுவரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனின் இந்திய மீனவா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்ணாண்டோ திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு, இலங்கை அரசின் தமிழக மீனவா்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் செவ்வாய்க்கிழமை பாம்பன் தெற்குவாடி கடலில் மீனவா்களுடன் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும். இதில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்ணாண்டோ ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.
மேலும், வருகிற புதன்கிழமை (பிப்.28) காலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தேசிய தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்ணாண்டோ தலைமையில் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி: தொகுதியை தக்கவைக்க இந்நாள் பிரதிநிதி மீட்க முன்னாள் பிரதிநிதி தீவிரம்!

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடையத்தில் திமுகவுக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸாா்

வி.கே.புரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் பிரசாரம்
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


