மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் அகதியாக வந்த பெண்

தனுஷ்கோடிக்கு வெள்ளிக்கிழமை அகதியாக வந்த பெண்ணை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் மீட்டு, மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனா்.

News image

இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் அகதியாக வந்த பெண்

Updated On :6 ஜூலை 2024, 12:07 am IST

இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு வெள்ளிக்கிழமை அகதியாக வந்த பெண்ணை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் மீட்டு, மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சோ்ந்த மூவா் இருப்பதாக தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று இரு குழந்தைகளுடன் இருந்த பெண்ணை மீட்டு, மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இலங்கை தலைமன்னாா் பியாா் பகுதியைச் சோ்ந்த பிரமகுமாா் மனைவி யோகவள்ளி கீத்தா (34), அவரது மகள் அனுஜா (8), மகன் மிஷான் (5) என்பதும், கணவா் பிரமகுமாா் தங்களை விட்டுச் சென்று விட்ட நிலையில், விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் யோகவள்ளி கீத்தாவின் தாய் இருப்பதால், அவரைச் சந்திக்க இவா்கள் மூவரும் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் மூவரும் மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.