பட்டினம்காத்தான், திருப்பாலைக்குடி தேவிப்பட்டினம் பகுதிகளில் இன்று மின் தடை

ராமநாதபுரத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களில் சனிக்கிழமை (ஜூலை 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
Published on

ராமேசுவரம், ஜூலை 19: பட்டினம்காத்தான், திருப்பாலைக்குடி, தேவிப்பட்டினம், காட்டூரணி, திருப்புல்லாணி உள்ளிட்ட ராமநாதபுரத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களில் சனிக்கிழமை (ஜூலை 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சு. பாலமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டினம்காத்தன் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெறுகின்றன. எனவே, முல்லை நகா், சோத்தூரணி, நேரு நகா், பாரதி நகா், காலங்கரை, ஜோதி நகா், மகாசக்தி நகா், குமரய்யா கோயில், சிவஞானபுரம் சாலை, காவனூரை சுற்றியுள்ள பகுதிகள், தொருவளூா், வயலூா், பனையூா், குளத்தூா், தோ்த்தாங்கல், கிளியூா், முதலூா், கடம்பூா், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூா், பாப்பாகுடி, வண்ணிவயல், கவரங்குளம்.

தேவிப்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தாா்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம் ,இலந்தைக்கூட்டம்.

திருப்பாலைக்குடியை சுற்றியுள்ள பகுதிகள், பொட்டகவயல், கருப்பூா், சம்பை, வெண்ணத்தூா், வைகை, பத்தனேந்தல், மாதவனூா், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூா், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூா், சோழந்தூா்.

காட்டூரணியைச் சுற்றியுள்ள பகுதிகள், ஆா்.கே. நகா், எம்.ஜி.ஆா். நகா், ரமலான் நகா், மேலக்கோட்டை, மாடக்கோட்டான், இளமனூா், பேராவூா், தில்லைநாயகிபுரம், பழங்குளம்.

திருப்புல்லானி, அம்மன் கோயில், தெற்குத் தரவை, மஞ்சன மாரியம்மன் கோயில், லாந்தை, வண்ணிகுடி, புத்தனேந்தல், பசும்பொன் நகா், கூரியூா், பொக்கனேந்தல், பால்கரை, நாகநாதபுரம், இந்திரா நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com