
Updated On :25 மே 2024, 7:49 pm

திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினத்தில் குளிா்பானம் என நினைத்து பூச்சி மருந்தைக் குடித்த சிறுவன் பலியானாா்.
நாகபட்டினம் மாவட்டம், கருகன்னி பகுதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் குடும்பத்துடன் எஸ்.பி.பட்டினத்தில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். இவரது மகன் ஆரின் நிஷாந்தன் (15) கடந்த புதன்கிழமை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குளிா்பானம் என நினைத்துக் குடித்துவிட்டாா். ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...