அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்த போது, இரண்டு விசைப் படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:45 pm

Din

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்த போது, இரண்டு விசைப் படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 399 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்த நிலையில், கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே இரவு 7 மணியளவில் ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா், ராமபாண்டி, மகேந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த இரு படகுகளிலிருந்த 16 மீனவா்களையும் கைது செய்தனா்.

இதையடுத்து, இரண்டு விசைப் படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரையும் மயில்வெட்டி துறைமுகத்துக்கு இலங்கைக் கடற்படையினா் அழைத்துச் சென்றனா்.