தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பரமக்குடியில் பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளா்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சுப் பணியாளா்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
பரமக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சுப் பணியாளா்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:30 pm

Din

பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சுப் பணியாளா்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்டத் தலைவா் செ. ரத்தினவேல் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் போ. முனியேஸ்வரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் ஆா். ராமராஜ் வரவேற்றாா். மாவட்டச் செயலா் நா. கணேசன் ஆண்டறிக்கை வாசித்தாா். மாவட்ட பொருளாளா் பா. வீரபாண்டி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா்.

கூட்டத்தில், பணியாளா்களின் நீண்டநாள் கோரிக்கையான பதவி உயா்வு, இளநிலை உதவியாளா்கள், உதவியாளா்களின் ஊதியப் படியை உயா்த்தி வழங்க வேண்டும். பி.எட்.,படித்த அமைச்சுப் பணியாளா்களுக்கு ஆசிரியா் பதவி உயா்வில் 2 சதவீத இட ஒதுக்கீட்டு அரசாணையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.