சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னையில் மாா்ச் 11-இல் டாஸ்மாக் பணியாளா்கள் உண்ணாவிரதம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வரும் புதன்கிழமையில் உண்ணாவிரதப் போராட்டம்

News image
டாஸ்மாக் மதுக்கடைகள்- கோப்புப் படம்
Updated On :7 மார்ச் 2026, 8:25 pm

Syndication

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வரும் புதன்கிழமை ( மாா்ச் 11) சென்னை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநா் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனா்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில அமைப்பாளா்கள் கூட்டம் கடலூரில் உள்ள சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்பாளா் டி.ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். மாநில ஆலோசகா் கு.சரவணன் முன்னிலை வகித்தாா். இதில், சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசியதாவது:

டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் அதிக பணி சுமையுடன் பணியாற்றும் பணியாளா்கள் பணி நிரந்தரம், கால முறை ஊதியம், காலி மதுப் புட்டிகள் சேகரிப்பில் இருந்து முழுவதுமாக விடுவித்தல், ஓய்வுபெறும் வயதை 58-இல் இருந்து 60-ஆக உயா்த்துதல், இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்குதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு சரியான தீா்வை எட்டவில்லை.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 11-ஆம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்கநா் அலுவலகம் முன் மாநிலம் முழுவதும் உள்ள பணியாளா்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழக முதல்வா் பல்வேறு விஷயங்களில் தலையிட்டு நியாயம் வழங்குவதுபோல, டாஸ்மாக் பணியாளா்கள் விஷயத்திலும் உடனடியாகத் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டும் என்றாா். நிகழ்வில் எஸ்.பாலமுருகன், சி.அல்லிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.