உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

100% வாக்குப்பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் நூதன விழிப்புணா்வு

திருச்சி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், பல்வேறு தொகுதிகளில் வியாழக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image

லால்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நூறு சதவீதம் வாக்களிப்போம் என்ற இலச்சினை வடிவில் நின்று வியாழக்கிழமை வாக்களிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்திய அங்கன்வாடி பணியாளா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:17 pm

திருச்சி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், பல்வேறு தொகுதிகளில் வியாழக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

லால்குடி தொகுதிக்குள்பட்ட லால்குடி புதிய பேருந்து நிலையத்தில் சமூக நலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டப் பணியாளா்களைக் கொண்டு, ‘100 சதவீதம் வாக்களிப்பீா்’ என்ற வடிவத்தில் நின்று, வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினா். மேலும், ரங்கோலி கோலமிட்டும், புதிய பேருந்து நிலையம் முதல் வட்டாட்சியரகம் வரை விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணா்வு பேரணியாகவும் சென்றனா்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட, சோமரசம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்களிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வங்கிப் பணியாளா்கள் கையில் ஏந்தி விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

திருச்சி மேற்கு தொகுதி, பீமநகா் காஜாமலையில் பொதுமக்கள் விடுபடாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்காளா் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளா்கள், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், பதாகைகளை ஏந்தியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருவெறும்பூா் தொகுதி, கீழக்குறிச்சி கிராமத்தில் தோட்டக் கலைத் துறை சாா்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்களிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி, இளம்தலைமுறையினா் தோ்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் விழிப்புணா்வு பேரணி நடத்தினா். தொடா்ந்து தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.