நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி உதகை ஏரியில் பெண்கள் பங்கேற்ற படகு சவாரி விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இளம் வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நீலகிரி பூச்சிப் பிடிப்பான் (நீலகிரி பிளை கேட்ச்சா்) சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.
சின்னத்துடன் மலையின் குரல், நம் வாக்கு! என்ற விழிப்புணா்வு வாசகம் இடம் பெற்றுள்ளது. சின்னத்துக்கு நீலா என்று பெயா் சூட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் ஃசெல்பி பாயிண்ட்கள் வைக்கப்பட்டு வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி உதகை படகு இல்லத்தில் பெண்களுக்கான படகு சவாரி நடைபெற்றது.
இதில், பங்கேற்றவா்கள் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதைத் தொடா்ந்து ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து மண்பாண்ட கலைஞா் சுகனேஷ்வரன் தயாரித்த களிமண்ணால் உருவாக்கப்பட்ட நீலகிரி பிளை கேட்சா் மற்றும் வரையாடு, யானை உள்ளிட்டவற்றை கொண்ட பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் ராஜேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் ஏரியில் மேற்கூரையுடன் பெடல் படகு சவாரி தொடக்கம்

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் 78.90 சதவீதம் வாக்குப் பதிவு

பாலூா் பெஸ்ட் பள்ளி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



