தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

News image

கன்னியாகுமரியில் படகுத் துறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:08 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையொட்டி, தனியாா், அரசு ஊழியா்கள் வாக்களிப்பதற்காக வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கான படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இங்கு கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தோ்தலையொட்டி படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.