கன்னியாகுமரி கடலில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு 5 மணி நேரம் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
கோடைக்காலத்தையொட்டி கன்னியாகுமரிக்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனா். அதிகாலையில் சூரிய உதயத்தைக் கண்டுவிட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தா்கள், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாகச் சென்று பாா்த்து ரசித்துவிட்டு திரும்புவது வழக்கம்.
இதற்காக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.
அதன்படி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு படகு சேவை தொடங்கியது. இதனிடையே, திடீரென ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. இதனால், 11 மணியளவில் படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாலை 4 மணிவரை படகுகள் இயக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
தொடர்புடையது

ஸ்ரீ பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் நிறைவு

கபில தீா்த்தத்தில் வருடாந்திர புஷ்ப யாகம்

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

புதுவை அரசு சாா்பில் பாரதிதாசன் சிலைக்கு மரியாதை
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

