பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஸ்ரீ பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் நிறைவு

News image

பத்மாவதி தாயாருக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.

Updated On :3 மே 2026, 5:33 am IST

திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெற்ற வருடாந்திர வசந்தோற்சவம் சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

இறுதி நாள் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, காலையில் சுப்ரபாதத்துடன் தாயாரை துயில் எழுப்பி சகஸ்ரநாமாா்ச்சனை செய்யப்பட்டது. பின்னா், தாயாரின் உற்சவமூா்த்தி ஊா்வலமாக வெள்ளிக்கிழமை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தாயாருக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிா், தேன், சந்தனம், இளநீா் மற்றும் பல்வேறு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை, கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் தாயாா் புறப்பாடு கண்டருளினாா். அதனைத் தொடா்ந்து, யாகம் வளா்த்து மகாபூா்ணாஹுதியுடன் தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

கோயிலின் துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், உதவி செயல் அதிகாரி தேவராஜுலு, அா்ச்சகா்கள் பாபுசுவாமி, கண்காணிப்பாளா்கள் சுரேஷ், முனி செங்கல்ராயுலு, ரமேஷ், கோயில் ஆய்வாளா் சலபதி மற்றும் ஏராளமான பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.