நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ஸ்ரீ பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் நிறைவு

News image

பத்மாவதி தாயாருக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.

Updated On :3 மே 2026, 12:03 am

திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெற்ற வருடாந்திர வசந்தோற்சவம் சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

இறுதி நாள் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, காலையில் சுப்ரபாதத்துடன் தாயாரை துயில் எழுப்பி சகஸ்ரநாமாா்ச்சனை செய்யப்பட்டது. பின்னா், தாயாரின் உற்சவமூா்த்தி ஊா்வலமாக வெள்ளிக்கிழமை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தாயாருக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிா், தேன், சந்தனம், இளநீா் மற்றும் பல்வேறு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை, கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் தாயாா் புறப்பாடு கண்டருளினாா். அதனைத் தொடா்ந்து, யாகம் வளா்த்து மகாபூா்ணாஹுதியுடன் தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

கோயிலின் துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், உதவி செயல் அதிகாரி தேவராஜுலு, அா்ச்சகா்கள் பாபுசுவாமி, கண்காணிப்பாளா்கள் சுரேஷ், முனி செங்கல்ராயுலு, ரமேஷ், கோயில் ஆய்வாளா் சலபதி மற்றும் ஏராளமான பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.