எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பாலூா் பெஸ்ட் பள்ளி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

கருங்கல், பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பாலூா் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணி.

Updated On :22 ஏப்ரல் 2026, 1:54 am IST

கருங்கல், பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு பள்ளி தலைவா் கே. தங்கசுவாமி தலைமை வகித்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். முதுநிலை முதல்வா் சியாமளா தங்கசுவாமி முன்னிலை வகித்தாா். மாணவா்கள் கைகளில் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி ‘வாக்களிப்போம் நாட்டை முன்னேற்றுவோம்’, ‘உன் வாக்கு உன் உரிமை’ உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணி, பள்ளி வளாகத்தில் தொடங்கி பாலூா் சந்திப்பு வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.