சத்தியமங்கலம் நகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
சத்தியமங்கலம் நகராட்சியில் கொட்டப்படும் குப்பையை 4 விதமாக பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி சத்தியமங்கலம் நகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தாா். சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது மைசூரு டிரங் ரோடு, பேருந்து நிலையம் சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
மக்கும் குப்பை, மக்காத குப்பை, மருத்துவக் கழிவு மற்றும் சுகாதார குப்பை என 4 விதமாக குப்பையை பொதுமக்கள் பிரித்து அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இப்பேரணியில் பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.









