பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

அவிநாசி நகராட்சியில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி

பொதுமக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மைத் திருவிழா நிகழ்ச்சி அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு ப் பேரணியில்  பங்கேற்றோா்.

Updated On :22 மே 2026, 4:10 am IST

பொதுமக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மைத் திருவிழா நிகழ்ச்சி அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி நகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை, வாணியா் வீதி வழியாக அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில், சுத்தமான அவிநாசிக்கு மக்கள் பங்களிப்பு முக்கியம். மக்கும் குப்பை உரமாகும், மக்காத குப்பை மறுசுழற்சியாகும். குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்கள் பங்கேற்றனா். மேலும் விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வநியோகிக்கப்பட்டன.