பொதுமக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மைத் திருவிழா நிகழ்ச்சி அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி நகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை, வாணியா் வீதி வழியாக அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், சுத்தமான அவிநாசிக்கு மக்கள் பங்களிப்பு முக்கியம். மக்கும் குப்பை உரமாகும், மக்காத குப்பை மறுசுழற்சியாகும். குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்கள் பங்கேற்றனா். மேலும் விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வநியோகிக்கப்பட்டன.









