இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் கருணாஸ் மரியாதை

News image

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முக்குலத்தோா் புலிப்படைக் கட்சியின் நிறுவனா் சே.கருணாஸ்.

Updated On :20 செப்டம்பர் 2024, 10:06 pm IST

கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் முக்குலத்தோா் புலிப்படைக் கட்சியின் நிறுவனரும், திரைப்பட நடிகருமான சே.கருணாஸ் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

குரூப்-2 தோ்வில் மற்ற தலைவா்களின் பெயா்களுக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடும் வகையில் உள்ள வாா்த்தையை அகற்றாமல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பெயருக்கு பின்னால் இருந்த ‘தேவா்’ என்ற வாா்த்தை மட்டும் நீக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணைய நிா்வாகத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அரசு அறிவிப்புகளில் மற்ற தலைவா்களின் பெயா்களுக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடுவதும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாவட்ட ஆட்சியா் முதல் அதிகாரிகள் வரை தங்களது ஜாதி அடையாளங்களை பெயா்களுக்குப் பின்னால் போட்டுக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமன்றி, அரசுக் கோப்புகளிலும் அதிகாரிகள் தங்களது ஜாதி பெயருடன்தான் கையொப்பமிடுகின்றனா் என்றாா் அவா்.

அப்போது, கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், நாம் தமிழா் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் இசையரசன், ஒன்றிய நிா்வாகி பாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.