பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை

ராமேசுவரத்தில் புதன்கிழமை பரவலாக பெய்த மழையால் நகராட்சி அலுவலகம் முன் தேங்கிய மழைநீா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் பகுதியில் புதன்கிழமை பெய்த மிதமான மழையால் சாலைகள், தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

தென் தமிழகம், அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், பாண்டிச்சேரி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.

இந்த நிலையில், ராமேசுவரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் பகுதி, மாா்க்கெட் தெரு, லட்சுமண தீா்த்தம், பாம்பன் தெற்குவாடி, தோப்புக்காடு, தங்கச்சிமடம் நடுத்தெரு நகா் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி தங்கச்சிமடத்தில் அதிகபட்சமாக 33 மி.மீ., பாம்பன் 29.20 மி.மீ., ராமேசுவரம் 27 மி.மீ, மண்டபம் 23.40 மி.மீ. மழை பதிவானது.