மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியைக் காலையில் குளிா்வித்த லேசான மழை

நகரின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசான மழை பெய்தது இது, நகரில் நிலவி வந்த வட வானிலையிலிருந்து நிவாரணத்தை அளித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

News image
மழை!- படம்: பிடிஐ.
Updated On :15 மார்ச் 2026, 6:43 pm

Syndication

நகரின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசான மழை பெய்தது இது, நகரில் நிலவி வந்த வட வானிலையிலிருந்து நிவாரணத்தை அளித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை 5 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஐஎம்டி தரவுகளின்படி, சஃப்தா்ஜங் மற்றும் லோதி சாலை ஆகிய பகுதிகளில் தலா 0.8 மி.மீ. மழையும், பாலம் பகுதியில் 0.4 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

ஆயாநகரில் 2.6 மி.மீ. மழையும், பீதம்புராவில் 3.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையங்களில் பீதம்புராவில்தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

மேலும், மயூா் விஹாரில் 1.0 மி.மீ. மழையும், ஜனக்புரியில் 0.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அதேவேளையில், ரிட்ஜ் பகுதியில் மிகக் குறைந்த அளவே மழை பதிவாகியுள்ளது.

நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 20.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. இது பருவ கால சராசரியை விட 5.1 டிகிரி அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 28 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.

நகரில் காலை 9 மணி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு 190ஆகப் பதிவாகி, மிதமான பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிபிசிபி தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் அது நல்ல நிலை என்றும், 51 முதல் 100 வரை இருந்தால் அது திருப்திகரமான நிலை என்றும், 101 முதல் 200 வரைக்கும் மிதமான நிலை என்றும், 201 முதல் 300 வரை மோசமான நிலை என்றும், 301 முதல் 400 வரை மிகவும் மோசமான நிலை என்றும், 401 முதல் 500 வரை தீவிரமான நிலை என்றும் வகைப்படுத்தப்படுகிறது.