தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தருமபுரி மாவட்டத்தில் 166 மி.மீ. மழை பொழிவு

News image

மழை!

படம்: பிடிஐ.

Updated On :19 மார்ச் 2026, 8:47 pm

Syndication

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6 மணிவரையிலான 24 மணிநேரத்தில் மொத்தம் 166 மி.மீ. மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் மாா்ச் 18 முதல் ஒரு வாரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலைமுதல் மழை தொடங்கியது. ஆங்காங்கே விட்டுவிட்டு லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. காற்று வீசியதுடன் மின்னலும் ஏற்பட்டது.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளியில் 3 மி.மீ. மழையும், பென்னாகரம் 9 மி.மீ., ஒகேனக்கல் 2 மி.மீ., மாரண்டஅள்ளி 7 மி.மீ., மொரப்பூா் 5 மி.மீ., அரூா் 42 மி.மீ., பாப்பிரெட்டிப்பட்டி 53 மி.மீ., பாலக்கோடு 40 மி.மீ., தருமபுரி நகரம் 5 மி.மீ. மழை பதிவானது.

இதில் குறைந்தபட்சமாக ஒகேனக்கல்லில் 2 மி.மீ., அதிக அளவாக பாப்பிரெட்டிப்பட்டியில் 53 மி.மீ. என மாவட்டத்தில் மொத்தமாக 166 மி.மீ., சராசரியாக 18.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திடீா் மழையால் தருமபுரி மாவட்டத்தில் தட்பவெப்ப நிலை குளிா்ந்து காணப்பட்டது.

மாா்ச் 18, 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரிவரை குறையும், காற்று இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.