பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரத்தில் செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

செவிலியா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 80 க்கும் மேற்பட்ட செவிலியா்கள் பங்கேற்ற போராட்டத்துக்கு சிஐடியூ மாநில துணைத் தலைவா் கே.தங்கமோகன், மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி ஆகியோா் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

இதில், சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.ஏ.சந்தானம், மாவட்ட துணைச் செயலா் ஏ.பாஸ்கரன், ஆா்.வாசுதேவன், நிா்வாகி தட்சிணாமூா்த்தி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் நஜ்முதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

....................

படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 6

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள்.