பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பட்டுப்போன பனைமரத்தால் விபத்து அபாயம்

திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டுப்போன பனைமரத்தால் விபத்து அபாயம் உள்ளதால் அதை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
~
Updated On :24 டிசம்பர் 2025, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டுப்போன பனைமரத்தால் விபத்து அபாயம் உள்ளதால் அதை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலம் பகுதியில் கொச்சி - தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மின்னல் பாய்ந்ததால் சேதமடைந்த நிலையில் பனைமரம் நிற்கிறது. இந்த மரம் எந்த நேரத்திலும் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் பனைமரத்தை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.