தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பாதுகாப்புக்காக புறக்காவல் நிலையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பாதுகாப்புக்காக புறக்காவல் நிலையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், அண்மையில் இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதில், 100 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்காக பேருந்து நிலையத்தின் பல்வேறு இடங்களில் 39 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில்

புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் திறந்து வைத்து கண்காணிப்புக் கேமரா காட்சிகளைப் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம், காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.