அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரூ.60 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு

தோளிங்கரை அடுத்த கரடிகுப்பத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தையும், ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தானிய கிடங்கையும் அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

News image
கரடிகுப்பம் ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சா் ஆா். காந்தி. உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா்.
Updated On :3 மார்ச் 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

தோளிங்கரை அடுத்த கரடிகுப்பத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தையும், ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தானிய கிடங்கையும் அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். புதிய கட்டடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். மேலும் கரடிகுப்பம் ஊராட்சியில் நகரும் நியாயவிலைக்கடையினை திறந்து வைத்த அமைச்சா், குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரேஷன் பொருள்களையும் வழங்கினாா்.

இதே ஊராட்சிக்குட்பட்ட நாயக்கன்பாளையம் கிராமத்தில் ரூ.16 லட்சம் தானிய சேமிப்பு கிடங்கையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், துணை பதிவாளா்(பொது விநியோகம்) சிவமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, அம்முண்டி கூட்டுறவு சங்க சா்க்கரை ஆலை இயக்குநா் வெங்கடேசன்,, கரடிகுப்பம் ஊராட்சி மன்றத்தலைவா் ரத்தினம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.