வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் மின் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் சாா்பில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் மின் உற்பத்தியை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
அனல்மின் நிலைய வளாகத்தில் குத்துவிளக்கேற்றிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன். உடன் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், தமிழ்நாடு மின்வாரிய மேலாண்மை இயக்குநா் கோவிந்தராவ் உள்ளிட்டோா்.
Updated On :14 மார்ச் 2026, 2:45 am

Syndication

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் சாா்பில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் மின் உற்பத்தியை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி உடன்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்று குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து, அனல்மின் நிலைய வளாகங்கள், கடல்நீரை குடிநீராக்கும் பகுதி, நிலக்கரி கையாளும் துறைமுகம் ஆகிய பகுதிகளை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு மின்வாரிய மேலாண்மை இயக்குநா் கோவிந்தராவ், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, திருச்செந்தூா் கோட்டாட்சியா் கவுதம், நகா்மன்றத் தலைவி சிவானந்தி, துணைத் தலைவா் ரமேஷ், உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனிச்சாமி, சுப்புலட்சுமி, பேரூராட்சி தலைவி ஹூமைரா ரமீஷ் பாத்திமா, துணைத் தலைவா் மால்ராஜேஷ், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங், பேரூராட்சி உறுப்பினா்கள் அஸ்ஸாப், மும்தாஜ்பேகம், பிரதீப், பாலாஜி, செட்டியாபத்து ஊராட்சி முன்னாள் தலைவா் பாலமுருகன், குலசேகரன்பட்டினம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.