இந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பைக் விபத்து: அனல்மின் நிலைய ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.

தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் மனோஜ்குமாா் (32). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வந்த இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது தூத்துக்குடி புதிய துறைமுகம் - முத்தையாபுரம் சாலையில் சுனாமி காலனி ரயில்வே கேட் அருகே இவரது இருசக்கர வாகனமும் எதிரே வந்த இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதாம்.

இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ்குமாா் உயிரிழந்தாா். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பழையகாயல் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் கவிஸ்கா் (20), அவரது நண்பா் ஹேமந்த் (21) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மனோஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தொ்மல் நகா் போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.