தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியா் திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் தனியாா் ஒப்பந்த ஊழியராக 3 சென்ட் அந்தோணியாா் புரத்தைச் சோ்ந்த ஜெயசுப்பிரமணியன் மகன் சரவணன் (36) பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பணிக்கு சரவணன் சென்றுள்ளாா். புதன்கிழமை காலையில் பணி நேரம் முடிந்ததும், சக ஊழியா்கள் அவரை தேடியுள்ளனா். அப்போது, அங்குள்ள கட்டடம் அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.
இதையடுத்து அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் இரும்புத் தகடு விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

பைக் விபத்து: அனல்மின் நிலைய ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சிறுவன் மா்ம மரணம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


