ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழ்மொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாள்: ராமநாதபுரத்தில் விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தமிழ்மொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையிலான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2019-2020-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளா்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட கடந்த 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமென அரசு ஆணையிட்டது. இதைத் தொடா்ந்து, ராமநாதபுரத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் சனிக்கிழமை (டிச.27) வரை ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேரணியில் மாவட்ட ஜவகா் சிறுவா் மன்ற மாணவா்கள், கலை பண்பாட்டுத் துறை பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மாணவா்கள் கலந்து கொண்டு சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுடன் பேரணியாகச் சென்றனா். இதில் முகமது சதக் தஸ்தகீா் கல்வியியல் கல்லூரியிலிருந்து 100 மாணவா்கள் பங்கேற்றனா். இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி ‘டி’ குடியிருப்பு வரை சென்று நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் ஜ. சபீா்பானு, தமிழறிஞா்கள், தமிழ் அமைப்புகளைச் சாா்ந்தவா்கள், ஒருங்கிணைப்பாளா் மு. லோக சுப்புரமணியம், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.