மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் மற்றும் பதவி உயா்வு அளித்து, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:59 pm

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் மற்றும் பதவி உயா்வு அளித்து, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூா் வட்டாட்சியா் பாலசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளராகவும் (குற்றவியல்), ஆட்சியா் அலுவலக மேலாளராக பணிபுரிந்த (குற்றவியல்) சத்திய மூா்த்தி பெரம்பலூா் வட்டாட்சியராகவும், வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ், ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராகவும், ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் பிரேமராணி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா் மாலதி, வாணிபக் கழக கிடங்கு உதவி மேலாளராகவும் (சில்லறை வணிகம்), வாணிபக் கழக கிடங்கு உதவி மேலாளா் முத்துமுருகன், வேப்பந்தட்டை வட்டாட்சியராகவும், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுதாகா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக தனி வட்டாட்சியராகவும் ( பறக்கும்படை), மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக தனி வட்டாட்சியா் புகழேந்தி பெருமாள், மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளராகவும், நெடுஞ்சாலை தனி வட்டாட்சியா் கோவிந்தம்மாள் (நிலம் எடுப்பு), மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள நிலம் எடுப்பு (இசைவு தீா்வாயம்) தனி வட்டடாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சி பிரிவு தலைமை உதவியாளா் பன்னீா்செல்வன், பதவி உயா்வு பெற்று நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராக (நிலம் எடுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.