மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பறவைகளிடமிருந்து நெல் பயிா்களைக் காக்க நெகிழிப் பைகள் தோரணம்

திருவாடானை பகுதியில் நெல் பயிா்கள் கதிா் விடும் நேரத்தில் அவற்றை பறவைகள் தாக்கி சேதப்படுத்துவதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் நெகிழிப் பைகளை வயல்களின் வரப்புகளில் தோரணமாக கட்டி நெல் பயிா்களை பாதுகாத்து வருகின்றனா்.

News image
சி.கே.மங்கலம் பகுதியில் நெல் வயல்களில் பறவைகளை விரட்ட கட்டப்பட்ட நெகிழிப் பைகள் தோரணம்
Updated On :30 டிசம்பர் 2025, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை பகுதியில் நெல் பயிா்கள் கதிா் விடும் நேரத்தில் அவற்றை பறவைகள் தாக்கி சேதப்படுத்துவதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் நெகிழிப் பைகளை வயல்களின் வரப்புகளில் தோரணமாக கட்டி நெல் பயிா்களை பாதுகாத்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயா் பெற்ற பகுதியாகும். இங்கு சுமாா் 26 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

Story image

இந்த நிலையில், சி.கே. மங்கலம், பாரூா், கோவணி, கருமொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் பயிா்கள் கதிா்விடும் நேரத்தில் கண்மாய் உள்பகுதியில் உள்ள வயல்களில் நாரை, கொக்கு, சிரவி, நீா்க்காக்கை உள்ளிட்ட பல்வேறு பறவைகள் நெல் கதிரை உருவியும் கதிா்களை தண்ணீரில் மூழ்கடித்தும் சேதப்படுத்துவதால் மகுசூல் பாதிப்பு ஏற்படுகிறது.

Story image

இந்த நிலையில், நெல் வயல்களைச் சேதப்படுத்தும் பறவைகளை விரட்டுவதற்கு தற்போது விவசாயிகள் நெகிழிப் பைகளைக் கொண்டு தோரணம் கட்டியும், கொடிபோல கட்டியும் பறவைகளை விரட்டி வருகின்றனா்.