மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடைகளுக்குள் நுழைந்து அபராதம் விதிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும்: விக்கிரமராஜா

முதுகுளத்தூரில் மாவட்ட வா்த்தக சங்க பொதுக்குழு கூட்டம்

News image
முதுகுளத்தூரில் நடைபெற்ற மாவட்ட வா்த்தக சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா.
Updated On :23 ஜனவரி 2025, 10:18 pm

Din

ஆய்வு என்ற பெயரில் கடைகளுக்குள் நுழைந்து அபராதம் விதிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட வா்த்தக சங்கம், பேரமைப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெகதீசன், முதுகுளத்தூா் நகா் தலைவரும், மாநில இணைச் செயலருமான ராமபாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா். முதுகுளத்தூா் நகா் வா்த்தக சங்க துணைத் தலைவா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகம்மது இக்பால் வரவேற்றாா்.

இதில், பங்கேற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா வணிகா் சங்கங்களின் கொடியை ஏற்றி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வணிகா்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் உரிமம் வழங்க வேண்டும். கடைகளில் திடீரென ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகள் உள்ளே சென்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனா். அது நிறுத்தப்பட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே துறையை மேலும் மேம்படுத்த வேண்டும். பாம்பன் பாலத்தை விரைவில் திறக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 33 வணிகா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா். இதில் மாவட்ட பொதுச் செயலா் ஜீவானந்தம், முதுகுளத்தூா் நகா் செயலா் ஜகுபா் அலி, நகா் பொருளாளா் சந்திரசேகா், முன்னாள் வா்த்தக சங்கத் தலைவா்கள் கருப்பசாமி, காதா் முகைதீன், கௌரவத் தலைவா் அழகா்சாமி, முகம்மது ஜியாவுதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.