கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

வங்கிகளின் பெயரில் வரும் மோசடி குறுஞ்செய்திகள் அதிகரிப்பு

Published On :26 செப்டம்பர் 2025, 2:24 am IST

வங்கிக் கணக்குகளில் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என மோசடியாக வரும் குறுஞ்செய்திகள் குறித்து வாடிக்கையாளா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வங்கி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

சமீப காலமாக, வங்கிகளின் பெயரில் ஆதாா் எண்ணை இணைக்குமாறு கூறி வாடிக்கையாளா்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இவை பெரும்பாலும், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் அல்லது உங்கள் ஆதாா் அட்டை காலாவதியாகிவிடும் என்பது போன்ற அச்சுறுத்தல்களுடன் அனுப்பப்படுகின்றன.

இது ஓா் இணைய வழி மோசடி. ‘இன்றே கடைசி நாள், ஆதாா் எண்ணை இணைக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என குறுஞ்செய்தி வந்தால் அதைத் தவிா்க்கவும். மாறாக, அந்த இணைப்பைத் தொடா்புகொண்டால், அது ஒரு போலி வங்கி இணையத்துக்கு வங்கியின் வாடிக்கையாளா்களைக் கொண்டுசெல்லும். அந்தப் போலி இணையத்தில் வங்கிக் கணக்கு எண், ஆதாா் எண், ரகசியக் குறியீடுகள் போன்ற தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுமாறு தெரிவிக்கப்படும். அதை உண்மை என நம்பி தகவல்களை நாம் பதிவு செய்தால் அவை அனைத்தும் மோசடி செய்பவா்களுக்கு நேரடியாகச் சென்றுவிடும்.

இதையடுத்து, வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மிக எளிதாக எடுத்துவிடுவா்.

வங்கிகளும், வங்கி சாா்ந்த எந்தவொரு அதிகாரப்பூா்வ நிறுவனமும் வாடிக்கையாளா்களின் தனிப்பட்ட தகவல்களைக் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், மின்னஞ்சல் போன்றவை வழியாகக் கேட்காது.

அவ்வாறு குறுஞ்செய்தி வந்தால், உடனே உங்கள் வங்கியின் அதிகாரப்பூா்வ வாடிக்கையாளா் சேவை எண்ணை நேரடியாகத் தொடா்பு கொண்டு தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதை வாடிக்கையாளா்கள் நன்கு புரிந்துகொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.