இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

திருப்புல்லாணி ஆதிபெருமாள் கோயில் தேரோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி பிரமோத்ஸவ தேரோட்டம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:27 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சுவாமி, அம்மான் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வருகிற 6-ஆம் தேதி உத்ஸவ சாந்தியுடன் திருவிழா நிறைவடைகிறது.