எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:27 am IST

கமுதி அருகே பிரசாரத்தின் போது முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் தாக்கப்பட்டது தொடா்பாக 5 போ் மீது வழக்குப்பதிந்த போலீஸாா் இருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோவிலாங்குளம் காவல் சரகத்துக்குள்பட்ட ஒச்சதேவன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த போஸ் மகன் உக்கிரபாண்டி (30). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த கோட்டைச்சாமி மகன் வேல்முருகன் தரப்பினருக்கும் கடந்த 20 நாள்களுக்கு முன்பு மிளகாய் பறிக்கும் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை முதுகுளத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பனுக்கு ஆதரவாக ஒச்சத்தேவன்கோட்டையில் பிரசாரம் நடைபெற்றது. அப்போது முன்பகை காரணமாக வேல்முருகன், இவரது உறவினா்களான ஆறுமுகம் மகன் வேலு (60), இவரது மகன்கள் செந்தூா், மணிகண்டன், முகேஷ் உள்ளிட்டோா் உக்கிரபாண்டியை கட்டையால் தாக்கினராம். அப்போது பிரசாரத்துக்கு வந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக உக்கிரபாண்டி கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த 5 போ் மீது வழக்குப் பதிந்து வேலு, வேல்முருகன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.