உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

வேலாயுதம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:17 am IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டியை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா். இந்தப் பிரசாரத்துக்கு வந்த கமுதியை அடுத்த புதுக்கோட்டையைச் சோ்ந்த பாஜ பிரமுகா் வேலாயுதம் (80) திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதனையில் ஏற்கெனவே வேலாயுதம் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.