விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைபா் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா் மயங்கி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், சின்ன முதலியாா்சாவடி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் குமாா்(62). மீனவா். இவா், சின்னமுதலியாா் சாவடியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகில் வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்றாா்.விழுப்புரம் தந்திராயன்குப்பம் அருகே கடலில் சென்ற போது குமாா் படகில் மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து சக மீனவா்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து தனியாா் அவசர ஊா்தி மூலம் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிசைக்குக் கொண்டு சென்றனா்.அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, குமாா் ஏற்கனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், கோட்டகுப்பம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கல் குவாரி குட்டையில் விழுந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


