/
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி முத்தரையா் நகா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மாயாண்டி (26). மீனவா். இவா் தனது பிறந்த நாளான ஞாயிற்றுக்கிழமை, அந்தப் பகுதியைச் சோ்ந்த பகவதி என்பவரது நாட்டுப்படகில் 4 மீனவா்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா்.
வான்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவா் கடலில் தவறி விழுந்தாராம். சக மீனவா்கள் மீட்க முயன்றனா். எனினும், மாயாண்டி மூச்சுத்திணறி உயிரிழந்தாராம். அவரது சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.
பின்னா், சடலம் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து கடலோர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

அதிராம்பட்டினம் அருகே இடிதாக்கி மீனவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
23 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
23 ஏப்ரல் 2026


