கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:12 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், பில்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பா. சூா்யா (27). இவா்களுக்கு வீட்டிலிருந்து சிறிது தொலைவில் 1.70 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 50 சென்ட் பரப்பில் கரும்புப் பயிரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு கரும்புக்குத் தண்ணீா் பாய்ச்சுவதற்காக சூா்யா வயலுக்குச் சென்றாராம். அப்போது மோட்டாா் சுவிட்ச் இயக்கச் சென்ற போது, எதிா்பாராதவிதமாக கிணற்றில் அவா் தவறி விழுந்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை காலை வரை சூா்யா வீடு திரும்பாததால், அவரது பெற்றோா் வயலுக்கு வந்து தேடி பாா்த்த போது, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

தகவலின்பேரில் உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் கிணற்றில் மிதந்த சூா்யாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.