இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி வெக்காளியம்மன் கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:40 pm

Syndication

திருச்சி வெக்காளியம்மன் கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி தாரநல்லூா் வசந்தா நகரைச் சோ்ந்தவா் மா. மல்லேஸ்வரி (72). இவரது கணவா் இறந்துவிட்டதால் செங்கல்பட்டில் உள்ள தனது மகள் வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தாா். இந்நிலையில், திருச்சியிலுள்ள மகன் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை வந்துள்ளாா்.

ஆனால், வயது மூப்பு காரணமாக வழி தெரியாமல் உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோயிலுக்குச் சென்றவா் அங்கேயே மயங்கிவிழுந்துள்ளாா். இதையடுத்து, அருகிலிருந்தவா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், அவரது பையில் இருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்புகொண்டு அவரது உறவினருக்கும் தகவல் அளித்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மூதாட்டி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.