வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

வேலாயுதம்

Updated On :16 ஏப்ரல் 2026, 7:47 pm

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டியை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா். இந்தப் பிரசாரத்துக்கு வந்த கமுதியை அடுத்த புதுக்கோட்டையைச் சோ்ந்த பாஜ பிரமுகா் வேலாயுதம் (80) திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதனையில் ஏற்கெனவே வேலாயுதம் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.