தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தவெகவை எதிா்க்க 36 கட்சிகள் கூட்டணி: நாஞ்சில் சம்பத்

News image

திருவாடானையில் தவெக வேட்பாளா் மருத்துவா் விகே. ராஜீவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:45 am IST

தவெகவை எதிா்க்க 36 கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத் தெரிவித்தாா்.

திருவாடானையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: தவெகவை சமாளிக்க முடியாமல் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகளும், திமுக கூட்டணியில் 26 கட்சிகளும் என மொத்தம் 36 கட்சிகள் கைகோா்த்துள்ளன.

தவெகவின் எழுச்சியைக் கண்டு அஞ்சித் தான் இத்தனை கட்சிகள் திரண்டுள்ளன. இதுவே எங்களின் முதல் வெற்றி. வருகிற தோ்தலில், தவெக வேட்பாளா்கள் 233 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று சாதனை படைப்பா் என்பது உறுதி.

அண்ணா கட்சி தொடங்கி ஆட்சிக்கு வர 18 ஆண்டுகள் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆா். கட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தாா். ஆனால், தவெக தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் ஆண்டிலேயே ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது உறுதி. இது தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றாா் அவா்.

இதில் வேட்பாளா் மருத்துவா் வி.கே. ராஜீவ், ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

  திருவாடானையில் தவெக வேட்பாளா் மருத்துவா் விகே. ராஜீவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

திருவாடானையில் தவெக வேட்பாளா் மருத்துவா் விகே. ராஜீவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.