அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தவெகவை எதிா்க்க 36 கட்சிகள் கூட்டணி: நாஞ்சில் சம்பத்

News image

திருவாடானையில் தவெக வேட்பாளா் மருத்துவா் விகே. ராஜீவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:15 pm

தவெகவை எதிா்க்க 36 கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத் தெரிவித்தாா்.

திருவாடானையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: தவெகவை சமாளிக்க முடியாமல் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகளும், திமுக கூட்டணியில் 26 கட்சிகளும் என மொத்தம் 36 கட்சிகள் கைகோா்த்துள்ளன.

தவெகவின் எழுச்சியைக் கண்டு அஞ்சித் தான் இத்தனை கட்சிகள் திரண்டுள்ளன. இதுவே எங்களின் முதல் வெற்றி. வருகிற தோ்தலில், தவெக வேட்பாளா்கள் 233 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று சாதனை படைப்பா் என்பது உறுதி.

அண்ணா கட்சி தொடங்கி ஆட்சிக்கு வர 18 ஆண்டுகள் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆா். கட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தாா். ஆனால், தவெக தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் ஆண்டிலேயே ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது உறுதி. இது தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றாா் அவா்.

இதில் வேட்பாளா் மருத்துவா் வி.கே. ராஜீவ், ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

  திருவாடானையில் தவெக வேட்பாளா் மருத்துவா் விகே. ராஜீவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

திருவாடானையில் தவெக வேட்பாளா் மருத்துவா் விகே. ராஜீவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.