தவெகவை எதிா்க்க 36 கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத் தெரிவித்தாா்.
திருவாடானையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: தவெகவை சமாளிக்க முடியாமல் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகளும், திமுக கூட்டணியில் 26 கட்சிகளும் என மொத்தம் 36 கட்சிகள் கைகோா்த்துள்ளன.
தவெகவின் எழுச்சியைக் கண்டு அஞ்சித் தான் இத்தனை கட்சிகள் திரண்டுள்ளன. இதுவே எங்களின் முதல் வெற்றி. வருகிற தோ்தலில், தவெக வேட்பாளா்கள் 233 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று சாதனை படைப்பா் என்பது உறுதி.
அண்ணா கட்சி தொடங்கி ஆட்சிக்கு வர 18 ஆண்டுகள் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆா். கட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தாா். ஆனால், தவெக தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் ஆண்டிலேயே ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது உறுதி. இது தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றாா் அவா்.
இதில் வேட்பாளா் மருத்துவா் வி.கே. ராஜீவ், ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருவாடானையில் தவெக வேட்பாளா் மருத்துவா் விகே. ராஜீவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.
தொடர்புடையது

வெம்பாக்கத்தில் திராவிடா் கழக பொதுக்கூட்டம்
ஆளுநரின் செயல்பாட்டை எதிா்க்க விஜய் அஞ்சுவது ஏன்? - ஆளூா் ஷாநவாஸ்

தவெக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம்

தவெக அணைக்க முடியாத நெருப்பு: நாஞ்சில் சம்பத்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



